வீட்டின் மீது முறிந்து விழுந்த பனைமரம்..! 2 வயது குழந்தை காயம், யாழ்.காரைநகரில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
வீட்டின் மீது முறிந்து விழுந்த பனைமரம்..! 2 வயது குழந்தை காயம், யாழ்.காரைநகரில் சம்பவம்..

யாழ்.காரைநகரில் பலத்த காற்றினால் பனைமரம் முறிந்து விழுந்ததில் 2 வயது குழந்தை காயமடைந்த நிலையில் சங்கானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. 

யாழ்.மாவட்டத்தில் கடும் காற்றுடன் கூடிய காலநிலை நீடித்துவரும் நிலையில் காரைநகர் ஜே-48 கிராமசேவகர் பிரிவில் இன்று மாலை பனைமரம் முறிந்து வீட்டின் மேல் விழுந்துள்ளது. 

வீட்டில் மூவர் வசித்து வரும் நிலையில் இருவர் வீட்டுக்கு வெளியில் நின்றதன் அதன் காரணமாக உயிர் ஆபத்துக தவிர்க்கப்பட்டுள்ளது.

வீடு பலத்த சேதமடைந்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் காரைநகர் பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் 

குறித்த பனையை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு