நெருக்கடியை சந்திக்கும் அரசு..! நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் இன்று நள்ளிரவு தொடக்கம், கிராம சேவகர்களும் அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
நெருக்கடியை சந்திக்கும் அரசு..! நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் இன்று நள்ளிரவு தொடக்கம், கிராம சேவகர்களும் அறிவிப்பு..

இன்று நள்ளிரவு தொடக்கம் கிராம சேவகர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தவுள்ளதாக அறிவித்திருக்கின்றனர். 

தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையில் முன்னுரிமை அளிக்க வேண்டியவர்கள் தவிர்க்கப்படுவதாக தெரிவித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இன்று கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இலங்கை கிராம சேவகர்கள் சங்கத்தின் தலைவர் சுமித் கொடிகார தெரிவித்தார்.

மேலும் கிராம சேவகர்கள், சமூர்த்தி, கிராம அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுடன் நெருக்கமாக பணியாற்றும் விவசாய அதிகாரிகள் போன்றவர்களுக்கும் 

தடுப்பூசி செலுத்தும்வரை போராட்டம் தொடரும் என அவர் குறிப்பிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு