யாழ்.நகரில் களமிறக்கப்பட்ட இராணுவத்தின் பெண்கள் மோட்டார் சைக்கிள் படையணி..!

ஆசிரியர் - Editor I
யாழ்.நகரில் களமிறக்கப்பட்ட இராணுவத்தின் பெண்கள் மோட்டார் சைக்கிள் படையணி..!

பயணத் தடை நீக்கப்பட்டிருக்கும் நிலையில் யாழ்.நகரில் போக்குவரத்து நொிசலை கட்டுப்படுத்தவும், கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கும் இராணுவத்தின் பெண்கள் மோட்டார் சைக்கிள் பிரிவு களமிறக்கப்பட்டுள்ளது. 

யாழ்.நகரப் பகுதியில் மக்கள் அதிக அளவில் ஒன்று கூடுகின்ற நிலைமையினை தவிர்ப்பதற்காகவே இராணுவத்தினரால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ்ப்பாண நகரப் பகுதியில் சன நெரிசலை கட்டுப்படுத்தும் முகமாக 

இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் வீதிகளில் போக்குவரத்து கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றா அதேவேளை இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் படையணியினரும் கண்காணிப்பு மற்றும் ரோத்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.

குறித்த நடவடிக்கையானது யாழ்.மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவின் நெறிப்படுத்தலில் யாழ்.நகரப்பகுதியில் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு