வற்றாப்பளை கண்ணகி அம்மன் வைகாசி விசாக பொங்கல் விழா சிறப்புற நடைபெற்றது..!

ஆசிரியர் - Editor I

வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வைகாசி விசாக பொஞ்சல் விழா இன்று அதிகாலையில் அனுமதிக்கப்பட்ட ஆலய நிர்வாகம் மற்றும் பொதுமக்களுடன் பொலீசார்,படையினரின் கண்காணிப்பில் நடைபெற்றது. 

கடந்த 17 ஆம் திகதி கடல் தீர்த்தம் எடுக்கப்பட்டு முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயத்தில் கடந்த ஏழு நாட்கள் கடல்நீரில் எடுக்கப்பட்ட தீர்த்தத்தில் எரிந்த தீபம் தீர்த்தம் மற்றும் மடைப்பண்டங்களுடன் 

வற்றாப்ளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு நேற்று அதிகாலை (24.05.21) எடுத்துவரப்பட்டு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வைகாசி விசாக பொங்கல் நிகழ்வுகள், பூசைகள் நடைபெற்றிருக்கின்றது. 

ஆலயத்திற்கு நேர்த்திக்கடன் செலுத்தவோ அல்லது ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்ளவோ பொதுமக்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை ஆலயத்திற்கு செல்லும் இரண்டு பிராதன வீதிகளிலும் 

படையினர் வீதிச்சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன் அனுமதிக்கப்பட் 51 பேர் மாத்திரம் ஆலயத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

படங்கள் - நன்றி தவசீலன்

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு