நாடு முழுவதும் 7ம் திகதிவரை நீடிக்கப்பட்ட பயணத்தடை நாளையும், 31ம் திகதியும், ஜீன் 4ம் திகதியும் தளர்த்தப்படும்..! இராணுவ தளபதி அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
நாடு முழுவதும் 7ம் திகதிவரை நீடிக்கப்பட்ட பயணத்தடை நாளையும், 31ம் திகதியும், ஜீன் 4ம் திகதியும் தளர்த்தப்படும்..! இராணுவ தளபதி அறிவிப்பு..

நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணத்தடை 7ம் திகதிவரை நீடிக்கப்பட்டிருக்கும் நிலையில் குறித்த பயணத்தடை தளர்வு நாட்கள் குறித்து இராணுவ தளபதியும், தேசிய கொரோனா தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். 

இதன்படி நாளைய தினமும், எதிர்வரும் 31ம் திகதி மற்றும் 4ம் திகதி ஆகிய 3 நாட்களும் மக்கள் தமது அத்தியாவசிய தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக பயணத்தடை தளர்த்தப்படும். இந்த சந்தர்ப்பங்களில் மக்கள் தமது அருகில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு செல்ல அனுமதி 

வழங்கப்படும் என அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இராணுவ தளபதி மேலும் கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு