பல்கலைகழக அனுமதிக்கு விண்ணப்பிப்போருக்கு மானியங்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
பல்கலைகழக அனுமதிக்கு விண்ணப்பிப்போருக்கு மானியங்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு..

நாட்டில் பயண கட்டுப்பாடு அமுலில் உள்ள நிலையில் பல்கலைகழக அனுமதிக்கு இணைய வழியாக விண்ணப்பிக்கலாம். எனவும் பாடசாலையிலிருந்து ஆவணங்கள் எவையும் தேவையில்லை. என பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

இன்று (திங்கட்கிழமை) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதனைத் தெரிவித்தார்.

விண்ணப்பதாரர்கள் தேவையான ஆவணங்களை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் என்றும் பாடசாலை அதிபரின் சான்றிதழ்கள் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார். அத்தோடு விண்ணப்பத்தில் கோரப்பட்டுள்ள கிராம அலுவலகரின் சான்றிதழ்களை 

தனியார் விண்ணப்பதாரர்கள் பெற வேண்டிய அவசியமில்லை என்றும் பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு