நாட்டை முடக்குவதால் பயனில்லை..! நிலைமை கைமீறி சென்றுவிட்டது, புதிய திட்டத்தை வகுக்கவேண்டும், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டு..

ஆசிரியர் - Editor I
நாட்டை முடக்குவதால் பயனில்லை..! நிலைமை கைமீறி சென்றுவிட்டது, புதிய திட்டத்தை வகுக்கவேண்டும், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டு..

நாட்டில் பயணத்தடை அல்லது முடக்கம் ஊடாக கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியாது. என கூறியிருக்கும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், சரியான நேரத்தில் சிகிச்சை வழங்க தவறியமையே அதிகரித்த இறப்புக்களுக்கு காரணம் எனவும் கூறியுள்ளது. 

இதன் காரணமாக கொவிட் நிமோனியா நிலைமை அதிகரித்து நோயாளிகள் வீடுகள், வீதிகள், வைத்தியசாலைகளில் அனுமதித்தவுடன் உயிரிழப்பதாக சங்கம் தெரிவித்துள்ளது. வைத்தியசாலையில் நோயாளிகளின் எண்ணிக்கை உச்சக்கட்டத்தை எட்டியமை, 

அறிகுறிகள் உள்ள நோயாளிகளை தவறவிட்டமை உட்பட பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் சமந்த ஆனந்த தெரிவித்துள்ளார். எதிர்வரும் சில தினங்களுக்கு நாட்டை முடக்குவதன் மூலமாக 

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படும் என்று எதிர்பார்க்க முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார். இதனால் வேலைத்திட்டம் ஒன்றை உரிய முறையில் மேற்கொள்ள வேண்டியது அவசியம் எனவும் 

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு