யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறச் சென்ற கணவன் மனைவிக்கும், உடுவில் பகுதியில் 11 மாத குழந்தைக்கும் கொரோனா தொற்று..!

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறச் சென்ற கணவன் மனைவிக்கும், உடுவில் பகுதியில் 11 மாத குழந்தைக்கும் கொரோனா தொற்று..!

யாழ்.மாநகரில் வர்த்தக நிலையம் நடத்திவரும் சாவகச்சோி - மீசாலையை சேர்ந்த கணவன் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

குறித்த இருவரும் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற சென்றிருந்த நிலையில் அங்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் தொற்று உறுதியானது. 

இதேவேளை உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 11 மாதங்களான சிசு ஒன்றுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

நேற்று முன்தினம் வெளியான பீ.சி.ஆர் முடிவுகளின்படி குறித்த குழந்தைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

மேலும் நேற்றய பீ.சி.ஆர் முடிவுகளின்படி பருத்தித்துறையில் சமுர்த்தி உத்தியோகஸ்த்தர் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு