யாழ்.நகரம் மற்றும் நகரை அண்டிய பகுதிகளில் பொலிஸார் விசேட ரோந்து நடவடிக்கை..! அநாவசியமாக வீதியில் நடமாடுவோர் அவதானம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.நகரம் மற்றும் நகரை அண்டிய பகுதிகளில் பொலிஸார் விசேட ரோந்து நடவடிக்கை..! அநாவசியமாக வீதியில் நடமாடுவோர் அவதானம்..

நாடு முழுவதும் பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் யாழ்.நகரம் மற்றும் நகரை அண்டிய பகுதிகளில் பொலிஸார் விசேட ரோந்து நடவடிக்கையினை மேற்கொண்டிருக்கின்றனர். 

அத்தியாவசியத் தேவை தவிர்ந்து வீதிகளில் பயணிப்போர் எச்சரிக்கை செய்து வீடுகளிற்கு திருப்பி அனுப்பப்படுகிறார்கள். 

அத்தோடு அத்தியாவசிய தேவையின் பொருட்டு வீதியில் பயணம் செய்வோரும் தமது பணி அடையாஅட்டை மற்றும் தமக்குரிய அனுமதிப்பத்திரங்களை காண்பித்த பின்னரே 

வீதியால் பயணிக்க அனுமதிக்கப்படுகிறார்கள் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த விசேட பொலிஸ் அணியினரால் குறித்து நடவடிக்கையானது 

யாழ்.நகரத்தின் முக்கியமான வீதிகளில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு