குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள பெண்..! காணாமல்போயிருந்த பெண் என தகவல்..

ஆசிரியர் - Editor I
குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள பெண்..! காணாமல்போயிருந்த பெண் என தகவல்..

கிளிநொச்சி - பளை இன்னாச்சி குளத்தில் பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டிருக்கின்றது. 

இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,பளை தம்பகாமம் பகுதியில் 45 வயதுடைய பெண் ஒருவர் நேற்றைய தினம் காணாமல் போயிருந்தார்.

இந்நிலையில் இன்று காலை பளை இன்னாச்சி குளத்தில் பெண் ஒருவருடைய சடலம் காணப்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பொலிசாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக குறித்த பகுதிக்கு சென்றுள்ள பொலிசார் சடலத்தை மீட்கும் நடவடிக்கையில் 

பிரதேச வாசிகளுடன் இணைந்து முன்னெடுத்துவருவதாக தகவல் கிடைத்துள்ளது. இவ்வாறு குளத்தில் சடலமாக காணப்படுபவர்

 நேற்றைய தினம் காணாமல் போயிருந்த பெண் என முதல்கட்ட தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு