யாழ்.ஆனைக்கோட்டையில் பீ.சி.ஆர் பரிசோதனைக்கு மாதிரியை கொடுத்துவிட்டு அனலைதீவு சென்றவருக்கு கொரோனா தொற்று உறுதி..!

ஆசிரியர் - Editor I
யாழ்.ஆனைக்கோட்டையில் பீ.சி.ஆர் பரிசோதனைக்கு மாதிரியை கொடுத்துவிட்டு அனலைதீவு சென்றவருக்கு கொரோனா தொற்று உறுதி..!

யாழ்.ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் பணி புரியும் ஒருவர் விடுமுறையில் அனலைதீவுக்கு சென்ற நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

இந்நிலையில் அவரும், அவருடைய குடும்பத்தினரும் அனலைதீவில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். அனலைதீவை சேர்ந்த குறித்த நபர் ஆனைக்கோட்டையில் உள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றிய நிலையில், 

அவருக்கு பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் பின்னர் கடந்த வியாழக்கிழமை சொந்த ஊரான அனலைதீவுக்கு சென்ற நிலையில் பீ.சி.ஆர் முடிவுகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனையடுத்து அவரது குடும்பம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவருடன் தொடர்பானவர்கள் தொடர்பில் தகவல் சேகரிக்கப்பட்டு வருகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு