யாழ்.பருத்தித்துறையில் மரண சடங்கில் கலந்துகொண்டவருக்கு கொரோனா..! இறுதி கிரியை நடத்திய குருக்கல் உட்பட 8 பேர் தனிமைப்படுத்தலில்..

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்தித்துறையில் மரண சடங்கில் கலந்துகொண்டவருக்கு கொரோனா..! இறுதி கிரியை நடத்திய குருக்கல் உட்பட 8 பேர் தனிமைப்படுத்தலில்..

யாழ்.பருத்தித்துறை - வியாபாரிமூலை பகுதியில் மரண சடங்கில் கலந்து கொண்டவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் அதே மரண சடங்கில் முறையாக முக கவசம் அணியாமல் கிரியை செய்த குருக்கல் மற்றும் உதவியாளர் உட்பட 8 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

வியாபாரிமூலை பகுதியில் இடம்பெற்ற மரணச் சடங்கொன்றில் கலந்து கொண்ட ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து பருத்தித்துறை பொதுச் சுகாதார பரிசோதகரால் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர். 

தொற்றுறுதியானவர் தொடர்பாளர்களை இனங்காட்டத் தவறிய நிலையில் இறுதிக்கிரிகைகள் தொடர்பாக சமூக ஊடகத்தில் வெளியாகிய காணொளியை புலனாய்வுக்குட்படுத்தி பொது சுகாதார பரிசோதகரால் குறித்த தொடர்பாளர்கள் ஆதாரங்களுடன் இனங்காணப்பட்டு 

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு