மிகப்பெரும் அச்சுறுத்தலில் நாடு..! 5 நாட்களில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! மேலும் தீவிரமாகும், வல்லுனர்கள் அதிர்ச்சி தகவல்..

ஆசிரியர் - Editor I
மிகப்பெரும் அச்சுறுத்தலில் நாடு..! 5 நாட்களில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! மேலும் தீவிரமாகும், வல்லுனர்கள் அதிர்ச்சி தகவல்..

நாட்டில் கடந்த ஐந்து நாட்களில் மட்டும் 15504 கொரோனா தொற்றாளர்கள் இனம்காணப்பட்ட நிலையில் இலங்கையில் அடுத்து வரும் நாட்கள் அபாயகரமானது என சுகாதாரத்துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இதிலிருந்து இலங்கை மீள்வதற்கான ஓரேவழி நாட்டை முடக்குனுவதுடன் மக்கள் சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாகப் பேணுவதுமே. இலங்கையில் நேற்றையதினம் கொரோனாத் தொற்றுக்கு உள்ளானோர் எண்ணிக்கை 

3 ஆயிரத்து 538 என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதற்கமைய கடந்து போன 5 நாட்களில் மட்டும் இலங்கையில் 15504 கொரோனா தொற்றாளர்கள் இனம்காணப்பட்டுள்ளனர். 

இந்த அதிகரிப்பு வீதம் இலங்கையை பொறுத்தவரையில் மிக அபாயகரமானது. இவற்றுக்கப்பால் இலங்கையில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 58 ஆயிரத்து 324 ஆகும். அடுத்து வரும் நாட்களில் 

இவற்றின் எண்ணிக்கை பெருமளவில் ஏறுமுகம் காணும் வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு