வடக்கில் மேலும் ஒரு கொரோனா மரணம்..! 77 வயதான பெண், மரணத்தின் பின் பீ.சி.ஆர் பரிசோதனையில் தொற்று உறுதி..

ஆசிரியர் - Editor I
வடக்கில் மேலும் ஒரு கொரோனா மரணம்..! 77 வயதான பெண், மரணத்தின் பின் பீ.சி.ஆர் பரிசோதனையில் தொற்று உறுதி..

கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 77 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் இறப்பின் பின் நடத்தப்பட்டிருக்கும் பீ.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கிளிநொச்சி - திருவையாறு பகுதியை சேர்ந்த குறித்த பெண்ணிடம் இறப்பின் பின்னர் பெறப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனை மாதிரி யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்றய தினம் பரிசோதிக்கப்பட்டிருந்தது. 

இதன்போதே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. இதேவேளை உயிரிழந்த பெண்ணுடைய மகன் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் பணியாற்றுவதாக கூறியிருக்கும் சுகாதார பிரிவினர் அவரையும், 

பெண்ணின் குடும்பத்தினரையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூகாதார பிரிவினர் கூறியுள்ளனர். இதேவேளை பெண்ணின் சடலத்தினை உறவினர் ஒருவர் 

முன்னிலையில் வவுனியாவில் சுகாதார நடைமுறைகளுக்கு அமைய தகனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு