யாழ்.வடமராட்சி கிழக்கு - குடத்தனையில் மணல் கடத்தல் கும்பல் மீது துப்பாக்கி சூடு..! முள்ளு கம்பியில் சிக்கி நின்றவர் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.வடமராட்சி கிழக்கு - குடத்தனையில் மணல் கடத்தல் கும்பல் மீது துப்பாக்கி சூடு..! முள்ளு கம்பியில் சிக்கி நின்றவர் கைது..

யாழ்.வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் மணல் கடத்தல் கும்பல் மீது விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியிருக்கின்றனர். சம்பவத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்டிருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது. 

சம்பவத்தில் தப்பி ஓடிய நிலையில் பொலிஸார் விசாரணைகளை துரிதப்படுத்தியிருக்கின்றனர்.  இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, 

கள்ள மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்த ஹன்டர் வாகனம் ஒன்றை அதிரடிப்படையினர் வழிமறிக்க முயற்சித்துள்ளனர். இதன்போது கட்டளையை மீறி வாகனம் பயணித்த நிலையில் வாகனம் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருக்கின்றது. 

துப்பாக்கி சூட்டில் வாகன ரயர் வெடித்ததை தொடர்ந்து மரத்துடன் மோதி வாகனம் விபத்துக்குள்ளானது. இதனையடுத்து வாகனத்திலிருந்தவர்கள் தப்பி ஓடியுள்ளதுடன் ஒருவர் முள்ளு கம்பியில் சிக்கிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு