யாழ்.பருத்துறையில் அதிகூடிய மழைவீழ்ச்சி..! 3 நாட்களுக்கு மழை தொடரும், திருநெல்வேலி வானிலை அவதான நிலையம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்துறையில் அதிகூடிய மழைவீழ்ச்சி..! 3 நாட்களுக்கு மழை தொடரும், திருநெல்வேலி வானிலை அவதான நிலையம்..

யாழ்.மாவட்டத்தில் 90.8 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி பிரதீபன் கூறியுள்ளார். 

நேற்றய தினம் மாலை 6 மணிக்கு பின்னர் யாழ்.குடாநாட்டின் பல்வேறு இடங்களிலும் மழைவீழ்ச்சி பதிவாகியிருந்தது அதனடிப்படையில்

யாழ்ப்பாணத்தில் 16.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், பருத்தித்துறையில் 144.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், சாவகச்சேரியில் 90.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சிச்சியும் பதிவானது. 

இதனடிப்படையில் யாழ்.மாவட்டத்தில் 90.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதோடு எதிர்வரும் மூன்று நாட்களுக்கு யாழ்.மாவட்டத்தில் மழையுடன் கூடிய காலநிலை

 நிலவும் எனவும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு