யாழ்.மருதனார்மடத்தில் 240 சாராய போத்தல்களுடன் வாகனம் முற்றுகை..! ஒருவர் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.மருதனார்மடத்தில் 240 சாராய போத்தல்களுடன் வாகனம் முற்றுகை..! ஒருவர் கைது..

வாகனம் ஒன்றில் சட்டத்திற்கு மாறாக எடுத்துச் செல்லப்பட்ட சுமார் 240 சாராய போத்தல்கள் பொலிஸ் புலனாய்வு பிரிவினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலமையில் கீழ் இயங்கும் யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவல்படி 

மருதனாமடத்தில் வைத்து சாராயம் கொண்டு சென்ற வாகனத்தை முற்றுகையிட்ட பொலிஸார், வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 240 சாரய போத்தல்களை

கைப்பற்றியுள்ளதுடன் ஒருவரை கைது செய்து வாகனத்தை கைப்பற்றி சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு