வேக கட்டுப்பாட்டை இழந்த இராணுவ வாகனம் பனை மரத்துடன் மோதி விபத்து! 3 பேர் படுகாயம், யாழ்.அச்சுவேலியில் சம்பவம்..

யாழ்.அச்சுவேலிப் பகுதியில் இன்று அதிகாலை இராணுவத்தின் கப் ரக வாகனம் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, பலாலியில் இருந்து யாழ்.நோக்கி பயணித்த இராணுவத்தின் சிறிய கப் ரக வாகனம் வீதியை விட்டு விலகி அருகில் இருந்த பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
சம்பவத்தில் வாகனத்தின் முற்பகுதியில் பலத்த சேதமடைந்துள்ளதுடன், மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் இரணுவ மற்றும் அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.