வடமாகாண ஆயுள்வேத மருத்துவர்கள், பணியாளர்கள் மற்றும் பொது போக்குவரத்து பணியாளர்களுக்கு தடுப்பூசி..! அமைச்சர் டக்ளஸ் துரித நடவடிக்கை..

ஆசிரியர் - Editor I
வடமாகாண ஆயுள்வேத மருத்துவர்கள், பணியாளர்கள் மற்றும் பொது போக்குவரத்து பணியாளர்களுக்கு தடுப்பூசி..! அமைச்சர் டக்ளஸ் துரித நடவடிக்கை..

வடமாகாண ஆயுள்வேத வைத்தியர்கள் மற்றும் ஆயுள்வேத வைத்தியசாலை பணியாணர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குமாறு அமைச்சரவையில் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்த கோரிக்கையை சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி ஏற்றுக்கொண்டிருக்கின்றார். 

தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகள் தொடர்பாக இன்று(18.05.2021) இடம்பெற்ற அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டபோது கடற்றொழில் அமைச்சரினால் குறித்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், வடக்கு மாகாணத்தில் சுகாதார சேவையில் ஈடுபடுகின்றவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றபோதிலும் 

ஆயுர்வேத வைத்தியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படாத நிலையில், ஆயுர்வேத வைத்திய மையங்கள் சிலவற்றில் கொறோனா கண்டறிப்பட்டுள்ளதை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவையில் சுட்டிக்காட்டினார்.அதேபோன்று வடக்கு மாகாணத்தில் பொதுப் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள அரச மற்றும் தனியார் பேருந்து சாரதிகள், 

நடத்துநர்களுக்கும் தடுப்பூசி செலுத்துவது முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.கடற்றொழில் அமைச்சரின் கருத்துக்களை ஏற்றுக்கொண்ட சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராட்சி, ஆயுர்வேத வைத்திய சேவையில் ஈடுபட்டுள்ளவர்கள் தொடர்பான விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், 

அவர்களுக்கான தடுப்பூசிகள் விரைவில் அனுப்பி வைக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.அதேபோன்று, பொதுப் போக்குவத்தில் ஈடுபடுகின்றவர்கள் தொடர்பில் அவதானம் செலுத்துவதற்கும் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு