தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை நினைவுகூர்ந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது..!

ஆசிரியர் - Editor I
தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை நினைவுகூர்ந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது..!

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை நினைவுகூர்ந்த குற்றச்சாட்டில் மட்டக்களப்பு - கல்குடாவில் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

இறுதி போரின்போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் முள்ளிவாய்க்காலை நினைவு தினம் தமிழர்களினால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. 

இந்நிலையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த பொலிஸ் பேச்சாளர், விடுதலைப் புலிகள் அமைப்பின் எந்த உறுப்பினர்களையும் நினைவுகூருவதற்கு 

மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.அந்தவகையில் பிரபாகரனின் மரணத்தை நினைவுகூரும் நிகழ்வை ஏற்பாடு செய்ததற்காக 

38 வயது ஒருவரை கல்குடா பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு