யாழ்.வலிகாமம் வடக்கில் மக்களின் காணிகளை ஊடறுத்து புதிய வீதிகளை அமைக்கும் இராணுவம்..! 647 ஏக்கர் காணி விடுவிப்பு சாத்தியப்படாதா..?

ஆசிரியர் - Editor I
யாழ்.வலிகாமம் வடக்கில் மக்களின் காணிகளை ஊடறுத்து புதிய வீதிகளை அமைக்கும் இராணுவம்..! 647 ஏக்கர் காணி விடுவிப்பு சாத்தியப்படாதா..?

யாழ்.வலி, வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் புதிதாக வீதிகளை இராணுவம் அமைத்து வருவதாக காணி உரிமையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

கட்டுவன், வசாவிளான், குரும்பசிட்டி ஆகிய முன்னரங்க தடுப்பு வேலிகளை அண்டி படையினர் போக்குவரத்துச் செய்யும் குறுகிய பாதைகள் நீண்டகாலமாக காணப்பட்டது. 

இவ்வாறு காணப்பட்ட பாதைகள் படையினர் தமது நிலைகளை மாற்றும்போது மாறியது. இருந்தபோதும் அண்மை நாட்களாக பதைகளின் 

அருகே இருந்த பற்றைகள் துப்பரவு செய்யப்படுவது மட்டுமன்றி மேலதிக மண் கொட்டப்பட்டு வீதியாக அமைக்கப்படுகின்றன. 

இவ்வாறு அமைக்கப்படும் வீதிகளில் கற்கள் பரவப்பட்டு தார் வீதிகளாக நிரந்தரமாக அமைக்கப்படுமா என்ற அச்சம் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வீதிகள் பலாலி வீதிக்கு கிழக்கே உள்ள 647 ஏக்கரின் சுற்று வட்டத்திற்கும் நீண்டு அப் பகுதிகளிலும் வீதி அமைப்பு பணிகள் இடம்பெறுகின்றன.

2020ஆம் ஆண்டிற்கு முன்னர் இருந்த அரசில் வலி, வடக்குப் பகுதியிலே பலாலி வீதிக்கு கிழக்கே உள்ள 647 ஏக்கர் நிலப் பரப்பினையும் 

நில உரிமையாளர்களிற்கு வழங்க இணங்கியபோதும் மேற்படி புதிய வீதி அமைப்பு பணிகளால் குறித்த நிலம் விடுவிக்கப்படுமா என்ற ஐயம் வலுப்பெறுகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு