யாழ்.காரைநகர் இளைஞர் கழக சம்மேளனத்தில் முன்மாதிரியான பணி..!

ஆசிரியர் - Editor I
யாழ்.காரைநகர் இளைஞர் கழக சம்மேளனத்தில் முன்மாதிரியான பணி..!

நாட்டில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் மருத்துவமனைகளில் நோயாளர்களுக்கான கட்டில்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் 10 நாட்களில் 10000 கட்டில்களை வழங்கும் புனித பணியில் காரைநகர் இளைஞர் கழக சம்மேளனம் 

மற்றும் காரைநகர் சக்தி இலவசக்கல்வி மேம்பாட்டு நிலையமும் இணைந்து காரைநகரிலிருந்து 25 கட்டில்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இந்த புனித பணியில் 15 கட்டில்களுக்கான பணத்தினை வழங்கிய சக்தி இலவசக்கல்வி மேம்பாட்டு நிலைய இயக்குனர் இந்திரன் வழங்கியுள்ளார்.

உதவி வழங்கிய சக்தி இலவச கல்வி மேம்பாட்டு நிலைய இயக்குனருக்கு இளைஞர்கள் நன்றிகளையும் பாரட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

நாளையதினம் வேலைகள் யாவும் நிறைவு செய்யப்பட்டு சுகாதாரதுறையிடம் கட்டில்கள் வழங்கப்படவுள்ளது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு