வடமாகாணம் பேராபத்தில்..! 378 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, யாழ்.மாவட்டத்தில் இன்றும் 33 பேருக்கு தொற்று, மாகாண சுகாதார பணிப்பாளர் தகவல்..

ஆசிரியர் - Editor I
வடமாகாணம் பேராபத்தில்..! 378 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, யாழ்.மாவட்டத்தில் இன்றும் 33 பேருக்கு தொற்று, மாகாண சுகாதார பணிப்பாளர் தகவல்..

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலை கொத்தணியுடன் தொடர்புடைய 261 பேர் உட்பட வடக்கில் இன்றைய தினம் 378 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். 

இதன்படி இன்றைய தினம் யாழ்.பல்கலைகழக மருத்துவபீடம், மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலை ஆகியவற்றில் 976 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 117 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

முல்லைத்தீவு மாவட்டத்தில் 66 பேருக்கும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 33 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் 7 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் 6 பேருக்கும், மன்னார் மாவட்டத்தில் 5 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

முல்லைத்தீவில் 66 பேருக்கு தொற்று.

புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையில் 61 பேருக்கும், முல்லைத்தீவு வைத்தியசாலையில் 2 பேருக்கும், புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் 3 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கிளிநொச்சியில் 7 பேருக்கு தொற்று.

கிளிநொச்சி வைத்தியசாலையில் 5 பேருக்கும், தரும்புரம் வைத்தியசாலையில் 2 பேருக்கும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியாவில் 6 பேருக்கு தொற்று.

வவுனியா வைத்தியசாலையில் 5 பேருக்கும், செட்டிகுளம் வைத்தியசாலையில் ஒருவருக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மன்னாரில் 5 பேருக்கு தொற்று.

மன்னார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 5 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் 33 பேருக்கு தொற்று.

யாழ்.போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட 7 பேருக்கும், பருத்தித்துறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும், சாவகச்சேரி வைத்தியசாலையில் மூவருக்கும்,

சங்கானை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும், தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும், தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  யாழ்.மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 9 பேருக்கும், 

சாவாகச்சரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 8 பேருக்கும், சண்டிலிப்பாய், நல்லூர் மற்றும் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் தலா ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலை பணியாளர்கள் 960 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட உடனடி அன்டிஜன் பரிசோதனையில் 261 பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்றும் பணிப்பாளர் தெரிவித்தார்

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு