நாடு முழுவதும் மீண்டும் முழுநேர பயண கட்டுப்பாடு அமுல்..! இராணுவ தளபதி சற்றுமுன் அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
நாடு முழுவதும் மீண்டும் முழுநேர பயண கட்டுப்பாடு அமுல்..! இராணுவ தளபதி சற்றுமுன் அறிவிப்பு..

நாடு முழுவதும் மீண்டும் முழுநேர பயண கட்டுப்பாடு அமுல்படுத்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார். 

இதன்படி 21 ஆம் திகதி 11 மணிமுதல் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்படும் எனவும்,

மீண்டும் 25 ஆம் திகதி இரவு 11 மணிமுதல் 28 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை தொடர்ந்தும் பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை நாளாந்தம் இரவு 11 மணி முதல் காலை 04 மணி வரை விதிக்கப்பட்ட இரவு நேர பயண கட்டுப்பாடுகள் இன்று முதல் மே 31 வரை தொடரும் என்றும் அவர் கூறினார்.

கடந்த வாரம் அமுல்படுத்தப்பட்டதைப் போலவே இந்த வார இறுதியிலும் நாடளாவிய ரீதியாக குறித்த கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு