சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடாத்த நீதிமன்றம் அனுமதி..!

ஆசிரியர் - Editor I
சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடாத்த நீதிமன்றம் அனுமதி..!

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடாத்த முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கின்றது. 

இது குறித்து சட்டத்தரணி க.சுகாஸ் தகவல் தருகையில், 

முள்ளிவாய்க்கால் பேரவல நினைவேந்தல் ஆண்டுதோறும் மே 18ம் திகதி அனுட்டிக்கப்படுகிறது. இந்நிலையில் இவ்வாண்டும் நினைவேந்தலுக்கான ஒழுங்குகள் செய்யப்பட்ட நிலையில், 

சுமார் 20 பேருக்கும் மேற்பட்டவர்களுக்கு முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் ஊடாக தடை உத்தரவு பெறப்பட்டிருந்த நிலையில் குறித்த தடை உத்தரவுக்கு எதிராக நகர்த்தல் பத்திரம்

இன்றைய தினம் தாக்கல் செய்யப்பட்டது. இதனடிப்படையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக நடாத்த அனுமதி வழங்கப்பட்டது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு