யாழ்.சித்தங்கேணியில் வீடு புகுந்து கத்திமுனையில் கொள்ளை..! இன்று அதிகாலை சம்பவம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.சித்தங்கேணியில் வீடு புகுந்து கத்திமுனையில் கொள்ளை..! இன்று அதிகாலை சம்பவம்..

யாழ்.வட்டுக்கோட்டை - சித்தங்கேணியில் இன்று அதிகாலை வாள்களுடன் வீட்டுக்குள் புகுந்த கொள்ளை கும்பல் வயோதிபர்கள் கழுத்தில் வாள் வைத்து அச்சுறுத்தி கொள்ளையடித்துள்ளனர். 

இன்று அதிகாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது, 80 வயது, 76 வயதான இரு பெண்கள் தனிமையில் வசிக்கும் குறித்த வீட்டுக்குள் இருவர் வாளுடன் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நுழைந்துள்ளதுடன்,

வயோதிபப் பெண்ணின் வாயினை மூடியபடி அவரிடம் இருந்த தோடு மற்றும் மோதிரத்தினை அபகரித்தனர். இதனை அவதானித்த மற்றைய வயோதிபப் பெண் உறவினர்களுக்கு தொலைபேசி மூலம் தகவல் வழங்கியதையடுத்து உறவினர்கள் அங்கு வந்துனர். 

உறவினர்களைக் கண்டதும் திருடர்கள் இருவரும் தப்பித்து சென்றுள்ளனர். இது இது தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு