யாழ்.நாவாந்துறையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண் மரணம்..! பீ.சி.ஆர் பரிசோதனை நடாத்த தீர்மானம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.நாவாந்துறையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண் மரணம்..! பீ.சி.ஆர் பரிசோதனை நடாத்த தீர்மானம்..

யாழ்.நாவாந்துறையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண் ஒருவர் இன்று காலை திடீர் சுகயீனமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தள்ளார். 

குறித்த பெண்ணுக்கு நெருக்கமான ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் குறித்த பெண் குடும்பத்துடன் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று காலை திடீர் சுகயீனம் எற்பட்டிருந்த நிலையில் 

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் முன்பே அவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் உயிரிழந்தவரின் உடலில் பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. 

பீ.சி.ஆர் பரிசோதனையின் பின்பே மேல் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு