நாடு முழுவதும் இன்றுமுதல் புதிய நடைமுறை அமுல்..! பொதுமக்கள் அவதானம், அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள்..

ஆசிரியர் - Editor I
நாடு முழுவதும் இன்றுமுதல் புதிய நடைமுறை அமுல்..! பொதுமக்கள் அவதானம், அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள்..

நாடு முழுவதும் இன்று {17} முதல் அமுலுக்குவரும்  நடைமுறைகளைக் கொரோனா தடுப்புக்கான ஜனாதிபதி செயலணி அறிவித்துள்ளது.

அவை வருமாறு:-

1. திருமண நிகழ்வுகளை நடத்த முடியாது. பதிவுத் திருமணம் செய்வதாக இருந்தால் பதிவாளர், சாட்சியாளர்கள் உட்பட 15 பேர் மட்டுமே பங்கேற்க முடியும். வெளியாட்களை அழைக்க முடியாது.

2. கொரோனா அல்லாத மரணங்கள் இடம்பெற்றால் இறுதிக் கிரியைகள் 24 மணிநேரத்துக்குள் நடைபெற வேண்டும். 15 பேர் மட்டுமே பங்கேற்க முடியும்.

3. பொதுப்போக்குவரத்து சேவையில் ஆசன எண்ணிக்கைகளுக்கு அமைவாக பயணிகளுக்கு அனுமதி. வாடகை வாகனங்களில் சாரதியுடன் இரண்டு பேர் மாத்திரமே பயணிக்க முடியும்.

4. அமைச்சின் செயலாளரின் சுற்று நிருபத்துக்கு அமைவாகவே அரச நிறுவனங்களில் செயற்பாடு.

5. தனியார் நிறுவனங்களில் குறைந்தபட்ச ஊழியர்கள் மற்றும் வீட்டிலிருந்து கடமையாற்றும் வசதிகளுடன் பணிகளை முன்னெடுக்கலாம்.

6. அவசியக் கூட்டங்கள் 10 பேருடன் மட்டுப்படுத்தப்பட வேண்டும். செயலமர்வுகள், மாநாடுகளுக்கு அனுமதியில்லை.

7. சில்லறைக் கடைகள், பல்பொருள் அங்காடிகள், கடைத் தொகுதிகள், சந்தைகள், பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் வங்கிகளின் இட வசதியில் 25 வீதமானோருக்கே அனுமதி.

8. பேக்கரி, வீதியோரக் கடைகள், அழகுசாதன நிலையங்களில் இட வசதியின் பிரகாரம் 25 வீதமானோருக்கே உட்பிரவேச அனுமதி.

9. பராமரிப்பு நிலையங்கள், பாலர் வகுப்புகள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் வகுப்புகள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன.

10. வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள், இரட்டைப் பிரஜாவுரிமையுடையோர், வெளிநாட்டவர்கள், இராஜதந்திரிகள் 14 நாள்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டியது கட்டாயம்.

11. வெளியே வருபவர்கள் அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு, சாரதி அனுமதி பத்திரத்தை கைவசம் வைத்திருக்க வேண்டும். 

12. தேசிய அடையாள அட்டை இல்லாதபட்சத்திலேயே கடவுச் சீட்டு, சாரதி அனுமதிப் பத்திரங்களை பயன்படுத்த முடியும். 

அதேவேளை, கர்ப்பிணிப் பெண்கள், இருதய நோயாளிகள் உட்பட அத்தியாவசிய தேவை நிமித்தம் வைத்தியசாலைகளுக்குச் செல்பவர்களுக்கும் இந்நடைமுறை பொருந்தாது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு