நாட்டில் உள்ள செல்வந்தர்களிடம் உதவிகோரும் அரசாங்கம்..! மருத்துவமனைகளில் உபகரணங்கள் பற்றாக்குறை..

ஆசிரியர் - Editor I
நாட்டில் உள்ள செல்வந்தர்களிடம் உதவிகோரும் அரசாங்கம்..! மருத்துவமனைகளில் உபகரணங்கள் பற்றாக்குறை..

நாட்டில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்திருக்கும் நிலையில் மருத்துவமனைகளுக்கு தேவையான வசதிகளை வழங்கி உதவுமாறு நாட்டிலுள்ள செல்வந்தர்களிடம் கொரோனா தடுப்புக்கான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே கோரியுள்ளார். 

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில் நோயாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றால் போன்று சிகிச்சையளிப்பதற்கான உபகரணங்களுக்கு மருத்துவமனைகளில் 

பற்றாக்குறை நிலவுகின்றது. தற்போதைய நிலைமையில் மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் கட்டில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.அவ்வாறு கட்டில்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது 

அங்கு சிகிச்சையளிப்பதற்கான சுவாச உதவிக் கருவிகள் உள்ளிட்ட உபகரணங்களையும் அதிகரிக்க வேண்டியுள்ளது. இதற்காக நாட்டிலுள்ள செல்வந்தர்கள் உதவ வேண்டும் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு