முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு தடைகோரும் கோப்பாய் பொலிஸாரின் விண்ணப்பத்தை நிராகரித்தது யாழ்.நீதிவான் நீதிமன்றம்..

ஆசிரியர் - Editor I
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு தடைகோரும் கோப்பாய் பொலிஸாரின் விண்ணப்பத்தை நிராகரித்தது யாழ்.நீதிவான் நீதிமன்றம்..

முள்ளிவாய்க்கால் பேரவல நினைவேந்தலுக்கு தடைகோரி கோப்பாய் பொலிஸாரினால் யாழ்.நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. 

மேலும் சம்பவம் நடக்கப்போவதை தடுக்ககோரும் ஏ அறிக்கையை தாக்கல் செய்யாமல் சம்பவம் நடந்து சட்டம் மீறப்பட்டால் பி அறிக்கை தாக்கல் செய்யுமாறும்

யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் பணித்துள்ளார். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை தடை செய்யக் கோரி 

பொலிஸாரால் இன்று ஏ அறிக்கையில் விண்ணப்பம் செய்யப்பட்டது. இலங்கை குற்றவியல் சட்டம் 106ஆம் பிரிவு மற்றும் தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்புச் சட்டத்தின் கீழ் 

இந்த ஏ அறிக்கையை கோப்பாய் பொலிஸார் முன்வைத்தனர்.நினைவேந்தல் நிகழ்வுகளால் சட்டம் மீறப்பட்டதாகக் கண்டறியப்பட்டால் பி அறிக்கையின் கீழ் 

விண்ணப்பம் செய்யுமாறு உத்தரவிட்ட நீதிவான், கோப்பாய் பொலிஸாரால் தடை கோரிய ஏ விண்ணப்பத்தை நிராகரித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு