கொரோனா தொற்றுக்குள்ளாவோரை அவர்களின் வீடுகளில் வைத்து கண்காணிக்க தீர்மானம்..!

ஆசிரியர் - Editor I
கொரோனா தொற்றுக்குள்ளாவோரை அவர்களின் வீடுகளில் வைத்து கண்காணிக்க தீர்மானம்..!

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளிக்கும் நடைமுறையில் மாற்றத்தை கொண்டுவரவுள்ளதாக கொவிட் தடுப்புக்கான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே கூறியிருக்கின்றார். 

இதன்படி பீ.சி.ஆர் பரிசோதனையில் தொற்று உறுதியாகும் நபர்களுக்கு தொற்று அறிகுறிகள் தென்படாதவிடத்து அவர்களை அவர்களுடைய வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. 

இதனைடுத்து அவருக்கு நோய் அறிகுறிகள் காணப்படுமாயின் அவர் வைத்தியசாலைக்கு மாற்றப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் திங்கட் கிழமை முதல் இந்த நடைமுறையை பின்பற்றவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு