முடக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் தீர்மானம்..!

ஆசிரியர் - Editor I
முடக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் தீர்மானம்..!

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைவாக முடக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு அத்தியாவசிய உணவு பொருட்கள் அடங்கிய நிவாரண பொதிகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்திருக்கின்றது. 

பிரதேச செயலகங்களினால் தெரிவு செய்யப்பட்டுள்ள மக்களுக்கு 5,000 ரூபாய் பெறுமதியான 20 அத்தியாவசியப் பொருட்கள் உள்ளடங்கலாக இந்நிவாரண பொதி வழங்கப்படவுள்ளதுன. இந்நிவாரணப் பொதி நாளை மறுதினம் திங்கட்கிழமை முதல் 

மக்களுக்கு வழங்கப்படவுள்ள அதேவேளை அவற்றினை மூன்று தினங்களுக்குள் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.இந்த நடவடிக்கையினை அனைத்து மாவட்ட செயலாளர்கள், 

பிரதேச செயலாளர்கள், கிராம சேவை அதிகாரிகள் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மூலம் முன்னெடுக்கப்படும் என்றும் வர்த்தக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு