நாட்டு மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அறிவிப்பு..! அரசின் அறிவிப்பை சரியாக விளங்கிக் கொள்ளுங்கள்..

ஆசிரியர் - Editor I
நாட்டு மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அறிவிப்பு..! அரசின் அறிவிப்பை சரியாக விளங்கிக் கொள்ளுங்கள்..

நாட்டில் நேற்றய தினம் இரவு 11 மணி தொடக்கம் தீவிரமான பயண கட்டுப்பாடு அமுலான நிலையில் வீடுகளில் இருந்து வெளியேறுபவர்களை பொலிஸார் உன்னிப்பாக கண்காணிப்பார்கள். என பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கூறியுள்ளார். 

மே 17 முதல் 31 ம் திகதி வீடுகளில் இருந்து வெளியேறுபவர்களை பொலிஸார் கண்காணிப்பார்கள் விதிமுறைகளை மீறுபவர்களிற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். நாட்டில் காணப்படும் கொரோனா நிலவரம் காரணமாக பொதுமக்கள் தங்கள் நாளாந்த நடவடிக்கைகளை 

மிகவும் கவனமாக திட்டமிடவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.அடையாள அட்டை இலக்கத்தின் அடிப்படையில் ஒருவர் மாத்திரம் அருகில் உள்ள வர்த்தக நிலையங்களிற்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதனை மீறுபவர்கள் கைதுசெய்யப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு