வெறிச்சோடியது வடக்கு..! பொலிஸ், இராணுவம் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில், அத்தியாவசிய தேவை தவிர்ந்து வீதிகளில் இறங்க தடை..

ஆசிரியர் - Editor I
வெறிச்சோடியது வடக்கு..! பொலிஸ், இராணுவம் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில், அத்தியாவசிய தேவை தவிர்ந்து வீதிகளில் இறங்க தடை..

நாடு முழுவதும் முடக்கம் அமுலுக்கு வந்திருக்கும் நிலையில் வடக்கில் 5 மாவட்டங்களிலும் நகரங்கள் தொடக்கம் கிராமப்புறங்கள்வரை மக்கள் நடமாட்டமில்லாமல் வெளிசோடியுள்ளது. 

நேற்றய தினம் இரவு 11 மணி தொடக்கம் முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மருந்தகங்கள் தவிர்ந்த ஏனைய சகல வர்த்தக நிலையங்களும் முடக்கப்பட்டிருக்கின்றது. 

வீதிகளில் மக்கள் நடமாட்டமில்லாமல் வெறிச்சோடியுள்ளதுடன், பொலிஸார், இராணுவம் தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதுடன், 

அத்தியாவசிய தேவை தவிர்ந்து நடமாட முயற்சிப்போர் கடுமையாக எச்சரிக்கப்பட்டுவருகின்றனர். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு