யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரம்..! போதனா வைத்தியசாலையில் விசேட சிகிச்சை விடுதிகள் திறக்கப்பட்டது..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரம்..! போதனா வைத்தியசாலையில் விசேட சிகிச்சை விடுதிகள் திறக்கப்பட்டது..

யாழ்.போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்யைளிப்பதற்காக புதிதாக விடுதிகள் தயார்ப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

நாட்டில் கொரோனா தொற்று தீவிரமாக பரவிவரும் நிலையில் மாவட்டங்கள் தோறும் தொற்றுக்குள்ளாவோருக்கு சிகிச்சை வழங்கக்கூடியவாறான 

ஏற்பாடுகள் மாகாண சுகாதார பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை,

அதி தீவிர சிகிச்சை , ஆக்சிஜன் தேவைப்படுவோருக்கு சிகிச்சை வழங்கமற்றும் கர்ப்பிணிகளுக்கு தொற்று ஏற்படும்போது 

அவர்களுக்கு விசேட சிகிச்சை வழங்க யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரண்டு விடுதிகள் கொரோனா சிகிச்சைக்கு என தயார் படுத்தப்பட்டுள்ளன.

புதிதாகத் தயார்படுத்தப்பட்டுள்ள விடுதியி னை யாழ் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் மற்றும் வைத்தியசாலை நிர்வாகத்தினர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு