முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சேதமாக்கப்பட்டுள்ளது..! இராணுவ பாதுகாப்புக்குள்...

ஆசிரியர் - Editor I
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சேதமாக்கப்பட்டுள்ளது..! இராணுவ பாதுகாப்புக்குள்...

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவேந்தல் முற்றம் சேதமாக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு பாதிரியார்கள் வாகனத்தில்  புதிய பாரிய நினைவுக்கல் கொண்டுவரப்பட்டு

ஒன்று அங்கு இறக்கி வைக்கப்பட்ட  நிலையில் முள்ளிவாய்க்கால் முற்றத்தை சுற்றி பொலிஸார் மற்றும் இராணுவம் குவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில்,  புதிதாக கொண்டு வரப்பட்ட நினைவுக்கல் இரவோடு இரவாக  காணாமல் ஆக்கப்பட்டுள்ளதுடன் முள்ளிவாய்க்கால் 

பகுதியில் ஏற்கெனவே அமைக்கப்பட்டு இருந்த நினைவு  சின்னம் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு