யாழ்.மாவட்ட மக்களுக்கு அரச அதிபர் விடுத்துள்ள அறிவிப்பு..! பொதுமக்கள் நடமாட அனுமதி இல்லை, அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோருக்கு விசேட நடைமுறை..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்ட மக்களுக்கு அரச அதிபர் விடுத்துள்ள அறிவிப்பு..! பொதுமக்கள் நடமாட அனுமதி இல்லை, அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோருக்கு விசேட நடைமுறை..

யாழ்.மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளபோது அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதிக்கப்படும் என யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன் கூறியுள்ளார். 

சமகால நிலைமை குறித்து இன்று மாலை ஊடகங்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், 

மாவட்டத்தில் கொரோனா நிலைமை சற்று தீவிரமடைந்த நிலை காணப்படுகின்றது இதேவேளையில் நாடுபூராகவும் நாளை இரவு 11 மணி முதல் 17ம் திகதி அதிகாலைவரை

ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக கொரோனா ஒழிப்பு மத்திய நிலையத்தினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அத்தியாவசியமான தேவைகளுக்கு மட்டும் வீடுகளில் இருந்து ஒருவர் வெளியில் செல்லலாம் என மத்திய நிலையத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் வாகனங்கள் மாத்திரம் வீதிகளில் பயணிக்க அனுமதிக்கப்படும். 

அந்தவகையில் உணவுப் பொருட்கள் எரிபொருள், சமையல் எரிவாயு மற்றும் விவசாய மீன்பிடி உற்பத்திப் பொருட்கள் அடங்கலான வாகனங்கள் மாத்திரம் பயணிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஊரடங்கு நேரத்தில் வீட்டில் இருந்து வெளியே யாரும் பயணிக்க வேண்டியிருந்தால் வழமைபோன்று ஊரடங்கு நேர நடைமுறைபோன்று 

அவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையம் சென்று தங்களுடைய அனுமதியினைப் பெற்று பயணிக்க முடியும். அதேவேளை அத்தியாவசிய சேவை தவிர்ந்த 

ஏனையோர் பயணிக்க அனுமதிக்கபடாது அதேவேளையில் பொதுமக்கள் சுகாதார நடைமுறையினையும் அரசாங்கத்தினுடைய சுகாதார வழிகாட்டல்களையும் பின்பற்றி 

தற்போது நாட்டில் தீவிரமாகப் பரவி வரும் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு முன்வரவேண்டும். அதேவேளையில் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் 

வெளிமாகாணங்களுக்கான பயணங்களில் ஈடுபடுவோர் தமது வாகன இலக்கம் சாரதி நடத்துனர் பெயர் விவரங்கள் அடங்கலான விபரங்களை 

பிரதேச செயலர் ஊடாக உரிய முறையில் மின்னஞ்சலில் எமக்கு விண்ணப்பித்தால் அதனை நாங்கள் அந்த மின்னஞ்சல்களை மாகாணங்களுக்கு இடையில் உள்ள காவலரண்களுக்கு 

அனுப்பி பயணத்தினை இலகுவாக்க கூடியதாக இருக்கும். அத்துடன் விவசாய மீன்பிடி உற்பத்தி பொருட்கள் போக்குவரத்தில் ஈடுபடுவோர்.

குறித்த திணைக்களங்களின் அனுமதியினைப் பெற்று உரியவாறு விண்ணப்பிக்குமிடத்து அதற்குரிய அனுமதிகளும் இலகுவாக பெற்றுக்கொடுக்க முடியும். 

எனவே இந்த ஊரடங்கு நிலைமையில் அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோர் தமக்குரிய அனுமதியினைப் பெற்றுக் கொள்வது தமது பயணங்களில்போது 

இலகுபடுத்தும் என்பதோடு குறித்த பயணங்களின் போதும் சுகாதார நடைமுறை ஊரடங்கு நடை முறையையும் தவறாது பின்பற்றி செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு