திருமண நிகழ்வுகளுக்கு தடை..! 15 பேருடன் பதிவு திருமணத்திற்கு அனுமதி, மரண சடங்கில் 15 பேருக்கு மட்டும் அனுமதி. புதிய சுகாதார கட்டுப்பாடு வெளியானது..

ஆசிரியர் - Editor I
திருமண நிகழ்வுகளுக்கு தடை..! 15 பேருடன் பதிவு திருமணத்திற்கு அனுமதி, மரண சடங்கில் 15 பேருக்கு மட்டும் அனுமதி. புதிய சுகாதார கட்டுப்பாடு வெளியானது..

மாகாணங்களுக்கிடையே பயண கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் நிகழ்வுகளுக்கான திருத்தப்பட்ட புதிய கட்டுப்பாடுகளை சுகாதார அமைச்சு வெளியிட்டிருக்கின்றது. 

இதன்படி மே 31 வரை திருமண வைபவங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் திருமண பதிவாளர் உட்பட 15 பேருடன் பதிவுத் திருமணம் செய்ய அனுமதி வழங்கப்படுவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை உயிரிழப்பவர்களின் உடல்களை வைத்தியசாலையில் இருந்து ஒப்படைக்கப்பட்டு 24 மணித்தியாலத்திற்குள் அடக்கம் செய்யப்பட வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. 

அத்துடன் இறுதி சடங்கில் ஒரே தடவையில் ஆகக்கூடியது 15 பேர் மாத்திரமே பங்குப்பற்ற முடியும் என்றும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு