மீண்டும் ஊரடங்கு சட்டம்..! அரசு தீர்மானித்துள்ளதாக தகவல், உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை..

ஆசிரியர் - Editor I
மீண்டும் ஊரடங்கு சட்டம்..! அரசு தீர்மானித்துள்ளதாக தகவல், உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை..

நாடு முழுவதும் தினசரி இரவு 11 மணி தொடக்கம் அதிகாலை 4 மணிவரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, கொழும்பை தளமாக கொண்டு இயங்கும் ஊடகங்கள் கூறுகின்றன. 

எனினும் அரசாங்கம் உத்தியோகபூர்வமான அறிவிப்பு எதனையும் வெளியிடவில்லை. என்பதுடன் எப்போது முதல் இந்த ஊரடங்கு அமுலாகும் என்ற தகவலும் இதுவரை வெளியாகவில்லை. 

எவ்வாறாயினும் ஊடரங்கை அமுல்படுத்த அரசு தீர்மானித்துள்ளதாகவும், அதனால் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோருக்கு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும், ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படும் காலப்பகுதியில் பொருட்கள் கொள்வனவுக்காக வீடுகளில் இருந்து ஒருவர் மாத்திரமே வெளியில் சென்று வர அனுமதி வழங்குவதும், அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் 

நாட்களை ஒதுக்கிக்கொடுப்பது தொடர்பிலும் அரசாங்கம் அவதானம் செலுத்தி வருவதாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு