தமிழகத்திலிருந்து கடல்வழியாக வந்து யாழ்.சுழிபுரத்தில் பதுங்கியிருந்தவர் தனிமைப்படுத்தப்பட்டார்..! பீ.சி.ஆர் பரிசோதனையின் பின் மேல் நடவடிக்கை..

ஆசிரியர் - Editor I
தமிழகத்திலிருந்து கடல்வழியாக வந்து யாழ்.சுழிபுரத்தில் பதுங்கியிருந்தவர் தனிமைப்படுத்தப்பட்டார்..! பீ.சி.ஆர் பரிசோதனையின் பின் மேல் நடவடிக்கை..

தமிழகத்திலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்குள் நுழைந்து யாழ்.சுழிபுரத்தில் பதுங்கியிருந்த நபர் சுகாதார பிரிவினர் மற்றும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. தமிழகத்திலிருந்து கடல்வழியாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த நபர் மன்னார் மாவட்டத்திற்கு வந்துள்ளதுடன், அங்கிருந்து பேருந்து மூலம் யாழ்ப்பாணம் வந்து

யாழ்ப்பாணம் சுழிபுரத்திற்கு சென்று தங்கியிருந்த நிலையில் பொலிஸார் மற்றும் சுகாதார பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த நபர் இன்று மாலை கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 

அவருக்கு பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதுடன் பீ.சி.ஆர் முடிவுகளின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார துறையினர் தொிவித்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு