வெளி மாகாணத்தை சேர்ந்தவர்களுக்கு தங்குமிடம் வழங்கினால் சட்ட நடவடிக்கை..! புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ள பொலிஸ் பேச்சாளர்..

ஆசிரியர் - Editor I
வெளி மாகாணத்தை சேர்ந்தவர்களுக்கு தங்குமிடம் வழங்கினால் சட்ட நடவடிக்கை..! புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ள பொலிஸ் பேச்சாளர்..

மாகாணங்களுக்கிடையில் பயண கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் பொலிஸார் புதிய கட்டுப்பாடுகளை விதித்திருக்கின்றனர். இது குறித்து பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கூறியுள்ளதாவது,

01. வெளி மாகாணங்களிலிருந்து வரும் நபர்களுக்குத் தங்குமிடம் வழங்குவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை. 

02. இன்றிரவு முதல் பஸ் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு மட்டுமே பயணிகளை ஏற்றிச் செல்ல செல்ல முடியும், பஸ்ஸில் நின்று பயணிக்க அனுமதி இல்லை.

03. முச்சக்கர வண்டி ஓட்டுநரைத் தவிர இரண்டு பேரை மட்டுமே ஏற்றிச் செல்ல முடியும்.

04. அனைத்து பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைகளும் ரத்து செய்யப்படுகின்றது.

05. இன்று நள்ளிரவு முதல் அனைத்து மாகாண எல்லைகளிலும் அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினரின் வீதி தடை அமைக்கப்படும்.

06. விடுமுறை மற்றும் ஓய்வுக்கால பயணங்கள் அனுமதிக்கப்படாது.அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அலுவலக ஐடி பயன்படுத்தலாம்.

07. வேறு மாகாணங்களில் இருந்து வருவோரை திரும்பி அனுப்புமாறு ஹோட்டல்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு