கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் மேலும் 14 பொலிஸ் உத்தியோகஸ்த்தர்களுக்கு கொரோனா தொற்று..!

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் மேலும் 14 பொலிஸ் உத்தியோகஸ்த்தர்களுக்கு கொரோனா தொற்று..!

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் மேலும 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

நேற்று முன்தினம் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸார் 22 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் தொற்றுக்குள்ளான பொலிஸாருடன் நெருக்கமான தொடர்பிலிருந்த பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். 

அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகள் இன்று வெளியாகியிருந்தன. இதன்போதே புதிதாக 14 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தினைச் சேர்ந்த கொரோனாத் தொற்றுக்குள்ளான பொலிஸாரின் மொத்த எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு