வடக்கில் தொடரும் கொரோனா அபாயம்..! இன்றும் 25 பேருக்கு தொற்று, மாகாண சுகாதார பணிப்பாளர் தகவல்..

ஆசிரியர் - Editor I
வடக்கில் தொடரும் கொரோனா அபாயம்..! இன்றும் 25 பேருக்கு தொற்று, மாகாண சுகாதார பணிப்பாளர் தகவல்..

யாழ்.மாவட்டத்தில் 14 பேர் உட்பட வடக்கில் 25 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். 

இதன்படி யாழ்.சிறைச்சாலையில் 5 பேருக்கும், யாழ்.போதனா வைத்தியசாலையில் 7 பேருக்கும், தெல்லிப்பழை மற்றும் ஊர்காவற்றுறை பகுதிகளில் இருவருக்குமாக 14 பேருக்கு தொற்று உறுதி செய்ப்பட்டுள்ளது. 

இதேபோல் மன்னார் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கும், கிளிநொச்சி வைத்தியசாலை மற்றும் பளை வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவுகளில் 3 பேருக்கும், 

வவுனியா மாவட்டத்தில் குருக்கல் புதுக்குளம் பகுதியில் 5 பேருக்கும், வவுனியா வைத்தியசாலையில் 2 பேருக்குமாக 25 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பணிப்பாளர் கூறியுள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு