அதிகாலையில் நடந்த கோர விபத்து..! இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு..

ஆசிரியர் - Editor I
அதிகாலையில் நடந்த கோர விபத்து..! இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு..

மட்டக்களப்பு - மியான்குளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி புறப்பட்ட கார் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது. 

மட்டக்களப்பு தனியார் பேருந்து உரிமையாளரும் அவருடன் சேர்ந்து இன்னொரு பெண்ணும் உயிரிழந்துள்ளார்கள். 

பரமேஸ்வரன் தனுயன், மற்றும் வினோகா துரைசிங்கம் என்ற இருவருமே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

விபத்துக்குள்ளான இரு சடலமும் வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பான 

மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொள்கின்றனர் குறிப்பிடத்தக்கது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு