வடக்கில் தொடரும் அபாயம்..! இன்றும் 28 பேருக்கு தொற்று, பலர் மருத்துவமனைகளின் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற சென்றோர்..

ஆசிரியர் - Editor I
வடக்கில் தொடரும் அபாயம்..! இன்றும் 28 பேருக்கு தொற்று, பலர் மருத்துவமனைகளின் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற சென்றோர்..

யாழ்.மாவட்டத்தில் 20 பேர் உட்பட வடக்கில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தொற்றுக்குள்ளானவர்கள் விபரங்களை மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் வெளியிட்டுள்ளார். 

இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் 6 பேருக்கும், யாழ்.சிறைச்சாலையில் 5 பேருக்கும், தெல்லிப்பழை வைத்தியசாலையில் ஒருவருக்கும், சண்டிலிப்பாயில் 4 பேரக்கும், சங்கானையில் 4 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதேபோல் முல்லைத்தீவு வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற சென்ற ஒருவருக்கும், கிளிநொச்சி வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற வந்த 7 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு