யாழ்.மாவட்டத்தில் மேலும் 2 கொரோனா மரணங்கள் பதிவானது..! யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தவர்கள்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் மேலும் 2 கொரோனா மரணங்கள் பதிவானது..! யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தவர்கள்..

யாழ்.போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்றுவந்த இருவர் உயிரிழந்துள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். 

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், யாழ்.மாநகரரை சேர்ந்த 77 வயதான முதியவர் மற்றும் யாழ்.இளவாலை பகுதியை சேர்ந்த 75 வயதான பெண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பணிப்பாளர் கூறியுள்ளார். 

இதேவேளை யாழ்.மாவட்டத்தில் இதுவரை 21 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், வடமாகாணத்தில் 27 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக பணிப்பாளர் மேலும் கூறியிருக்கின்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு