யாழ்.கொடிகாமத்தில் இரு கிராமசேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் முடக்கம்..! மாகாண சுகாதார பணிப்பாளர் தகவல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.கொடிகாமத்தில் இரு கிராமசேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் முடக்கம்..! மாகாண சுகாதார பணிப்பாளர் தகவல்..

யாழ்.கொடிகாமம் சந்தையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கும் நிலையில் கொடிகாமம் பகுதியில் இரு கிராமசேவகர் பிரிவுகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் முடக்கப்படுகின்றது. 

இந்த அறிவிப்பை மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தொிவித்துள்ளார். இதன்படி கொடிகாமம் மத்தி ஜே.326, மற்றும் கொடிகாமம் வடக்கு ஜே.327 ஆகிய கிராமசேவகர் பிரிவுகள் முடக்கப்படுகின்றது. 

என பணிப்பாளர் தொிவித்துள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு