நாடே தடுப்பூசியை எதிர்பார்த்திருக்கும் நிலையில் 600 பேருக்கு செலுத்தகூடிய தடுப்பூசிகளை நாசமாக்கிய தாதியர்கள்..!

ஆசிரியர் - Editor I
நாடே தடுப்பூசியை எதிர்பார்த்திருக்கும் நிலையில் 600 பேருக்கு செலுத்தகூடிய தடுப்பூசிகளை நாசமாக்கிய தாதியர்கள்..!

இலங்கையில் தடுப்பூசி போதுமானதாக இல்லாத நிலையில் தாதியர்களின் அசமந்த போக்கினால் சுமார் 600 பேருக்கு செலுத்த கூடிய கொவிட் தடுப்பூசி மருந்து பயன்படுத்த முடியாமல்போயுள்ளது. 

கிழக்கு மாகாண வைத்தியசாலை ஒன்றில் 2 ஆம் கட்டமாக ஏற்றப்பட்ட தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இடம்பெற்ற போது தாதியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் மாலை பணியை முடித்துவிட்டு செல்லும்போது 

தடுப்பூசி குப்பிகளை குளிரூட்டியில் வைக்காது வெளியே வைத்துவிட்டு சென்றுள்ளனர் இச்சம்பவம் கடந்த 1 ஆம் ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. 

இவ்வாறு அதிகாரிகளின் அசமந்த போக்கினால், வீணாகிப்போன அந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளன 

என சுகாதார அமைச்சின் வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.தடுப்பூசி ஏற்றும் பணி மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. 

அதில் மருந்து நிரப்பப்பட்ட 57 குப்பிகளை குளிர்சாதனப் பெட்டியில் வைக்காமல், வெளியிலேயே வைத்துவிட்டு சென்றுவிட்டனர்.

நேற்று காலையில், ஏனையோருக்கு தடுப்பூசி எற்றுவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. 

ஆனால், 4 பாகை தொடக்கம் 8 பாகை வெப்பத்தில், குளிர்தானப் பெட்டியில் வைக்கப்படவேண்டிய தடுப்பூசி மருந்துகள் வெளியிலேயே இருந்துள்ளன.

கிட்டத்தட்ட 15 மணித்தியாலங்களுக்கு மேல் வெளியில் வைக்கப்பட்டுள்ளதை கண்டனர். இதனால் இந்த தடுப்பூசி மருந்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஒரு மருந்து குப்பியிலுள்ள மருந்து, 10 பேருக்கு ஏற்ற முடியும். அங்கு சுமார் 57 மருந்து குப்பிகள் வீணாகியுள்ளன. 

இதனால், சுமார் 600 பேருக்கு ஏற்றக்கூடிய மருந்து குப்பிகள் வீணாகி போகியுள்ளன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு