கர்ப்பவதி பெண்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..! 70 கர்ப்பவதி பெண்களுக்கு கொரோனா தொற்று..

ஆசிரியர் - Editor I
கர்ப்பவதி பெண்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..! 70 கர்ப்பவதி பெண்களுக்கு கொரோனா தொற்று..

இலங்கையில் நேற்றய தினம் 70 கர்ப்பவதி பெண்கள் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக சமுதாய சுகாதார வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா கூறியிருக்கின்றார். 

இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது, கொரோனா தொற்றால் 70 கர்ப்பிணி தாய்மார்கள் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தற்போதைய சூழ்நிலையில், கர்ப்பிணி தாய்மார்கள் முடியுமானளவு 

தமது பயணங்களைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.பிறந்து ஒரு மாதம் முதல் 6 மாதம் வரையிலான குழந்தைகளுக்கும் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இந்நிலையில், மூச்சுத்திணறல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் உள்ளவர்கள் 

வீடுகளில் இருப்பார்களாயின் அவர்களுக்கு அருகில் குழந் தைகளை அனுமதிப்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.அத்துடன், சிறுவர்களுக்கு எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் வகையில் வீடுகளில் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு