8 மாவட்டங்களில் 49 பிரதேசங்கள் தனிமைப்படுத்தல் முடக்கத்தில்..! தொற்று பரவல் தொடர்வதால் மேலும் பல பிரதேசங்கள் முடக்கப்படும் அபாயம்..

ஆசிரியர் - Editor I
8 மாவட்டங்களில் 49 பிரதேசங்கள் தனிமைப்படுத்தல் முடக்கத்தில்..! தொற்று பரவல் தொடர்வதால் மேலும் பல பிரதேசங்கள் முடக்கப்படும் அபாயம்..

நாட்டில் கொரோனா தொற்று தீவிரமடைந்திருக்கும் நிலையில் நேற்று மாலை வரையில் 8 மாவட்டங்களில் 49 பிரதேசங்கள் முடக்கப்பட்டிருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் தொிவித்துள்ளது. 

“புத்தாண்டு கொத்தணி” நாளுக்கு நாள் தீவிரமடைந்துவரும் நிலையில் தொற்று பரவலின் அடிப்படையில் மாவட்டங்கள், பிரதேசங்கள் வாரியாக முடக்கல் அறிவிக்கப்பட்டுவருகின்றது. 

இதன்படி கடந்த 21ம் திகதி தொடக்கம் நேற்று மாலை வரையில் மாத்தளை, குருணாகல், மொனராகலை, களுத்துறை, ஹம்பகா, திருகோணமலை, காலி, பொலனறுவை ஆகிய 8 மாவட்டங்களில், 

சுமார் 49 கிராம சேவகர் பிரிவுகளும், 6 பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தல் முடக்கத்திற்குட்படுத்தப்பட்டிருக்கின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு